Monday, September 20, 2010

பத்து ரூபாய்க்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து!

இந்த நாட்டில் புதியதாக ஒரு நோய் வருவதற்கு முன்பே அந்த நோய்க்கான மருந்து முதலில் வந்துவிடுவதும்...

நோய் வரும்போதே அதனோடு மருந்தும் சேர்ந்து வருவதும்...

வந்த மருந்துகள் அனைத்தும் ஒருமாதத்தில் தீபாவளிக்கு பட்டாசு விற்பதுபோல் விற்றுத் தீர்ந்து விடுவதும்...

பண்டிகைக் காலங்களில் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்குவதுபோல் அரசாங்கம் மருந்து நிறுவனங்களில் கொள்முதல் செய்து ஏழைகளுக்கு சலுகை விலையில் வழங்குவதும்... பரம ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதும்...

இந்தியப் பேரரசசும்! தமிழக சிற்றரசும் வல்லரசாகிவிட்டதையே கட்டுகிறது!

வாழ்க! அலோபதி மருந்து நிறுவனங்கள்!

....

பன்றிக்காய்ச்சல் வரமால் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியபேரரசின் நலவாழ்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் “மாற்று மருத்துவம்” தொடர்பான பிரிவு பன்றிக்காய்ச்சலை தடுப்பதற்காகன ஓமியோபதி மருந்தின் பெயரை அறிவித்துள்ளது. இந்த மருந்தின் விலையும் மிகக்குறைவு. (விலை குறைந்தது ரூ.10 முதல் ரூ. 30 வரை மட்டுமே.) மிகக்குறைந்த விலையில் வாங்கி ஒரு குடும்பமே பன்றிக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.... (ஒரு நாளைக்கு இரண்டு வேலையென மூன்று நாட்கள் சாப்பிட்டால் போதும்)

அந்த மருந்தின் பெயர் “ஆர்சனிக்கம் அல்பம்-30” (Arsenicum album-30) அனைத்து ஓமியோபதி மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. அருகில் உள்ள ஓமியோபதி மருத்துவரிடம் ஆலோசித்து உறுதிசெய்துகொண்டு பயன்படுத்துங்கள். (ஓமியோபதி மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பத்து ரூபாய்க்கு மருந்து வாங்கி எங்கள் குடும்பத்தில் பயன்படுத்துகிறோம்.)
...

Saturday, September 4, 2010

வெற்றியா? வெட்கக்கேடா?

“இந்தியாவில் காங்கிரஸ் கட்சி அழிந்தால்தான் இந்த நாடு உருப்படும்” என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நாடு விடுதலை அடைந்தபோதே காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட்டிருக்க வேண்டும். நேருவின் சுயநலத்தால் அது நடைபெறாமல் போனது. தற்போது அந்த கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றதாம்! சோனியாகாந்தி நான்காவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துவிட்டாராம்! ஊடகங்கள் கொண்டாடுகிறது...

தற்போது உள்ள காங்கிரஸ் கட்சியின் உண்மையான பெயர் என்னவென்று தெரியவில்லை. (யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்) சோனியாகாந்தி தலைமையிலான அரசியல் கட்சியின் பெயரில் “காங்கிரஸ்” என்றும் நேரு குடும்பத்தின் பெயருக்குப்பின்னால் “கேண்டி” என்ற பெயர் திரித்து “காந்தி” என்று ஒட்டிக்கொண்டு இருப்பதாலேயே அந்த கட்சி நாட்டுக்கு விடுதலை வாங்கித்தந்த கட்சி என மீண்டும் மீண்டும் பரப்புரை செய்யப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்தின் சொத்தாக மாற்றப்பட்டதன் மூலம் இந்த நாடும் நேரு குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது. இந்தியாவில் நடைபெறும் ஆட்சி “மக்களாட்சியின் பெயரில் நடைபெறும் மன்னராட்சி” என்றால் அது மிகையில்லை. மன்னாராட்சி காலத்தில்கூட மன்னனின் நேரடி வாரிசுக்கே பட்டம் சூட்டிக்கொள்ளும் உரிமை இருந்ததாக சொல்லப்படுகிறது. இன்றைய வல்லரசு இந்தியாவில் மன்னனிடமோ மன்னனின் வாரிசுகளிடமோ வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு வழியில் முந்திவிரித்து பிள்ளை பெற்றுக்கொண்டால் போதும் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்ற நிலை உள்ளது... இந்த நாட்டின் குடிமக்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் இதற்காக வெட்கப்படப்போவதில்லை...


நேரு குடும்பத்தின் குடும்ப அட்டவனை இணையதளத்தில் கிடைத்தது அதையும் கொஞ்சம் பாருங்கள்...