Friday, October 29, 2010

என்கவுன்டர் - முன்னாள் ஐ.ஜி. க்கு ஆயுள் தண்டனை

நக்ஸலைட் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறை முன்னாள் ஐ.ஜி- லட்சுமனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது பற்றிய விவரம் வருமாறு: 1970ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி நக்ஸலைட் தலைவர் ஏ. வர்கீஸ், திருநெல்வேலி அருகே உள்ள வனப் பகுதியில் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து 1998-ம் ஆண்டு சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர், காவல்துறை அதிகாரிகள் லட்சுமணா மற்றும் விஜயன் உத்தரவின்பேரில் வர்கீûஸ கொன்றதாக ஒப்புக் கொண்டார். உடனே இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் பி. ராமச்சந்திரன் நாயர் (இப்போது உயிருடன் இல்லை), காவல்துறைத் தலைவர் லட்சுமணா உத்தரவின் பேரில் வர்கீûஸ கொலை செய்துள்ளார் என்று நீதிபதி எஸ். விஜயகுமார் தனது தீர்ப்பில் தெரிவித்தார். ரூ. 10 ஆயிரம் அபராதத் தொகையை லட்சுமணா செலுத்த வேண்டும் என்றும், இந்தத் தொகை உயிரிழந்த நக்ஸலைட் தலைவர் வர்கீஸ் குடும்பத்துக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். மற்றொரு குற்றவாளியான காவல்துறை முன்னாள் துணை ஆணையர் பி. விஜயன் குற்றமற்றவர் என அறிவித்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வைக்கம் புருஷோத்தமன் நாயர் வாதிட்டார். சாதாரண நபரை, நக்ஸலைட்டாக சித்தரித்து அவரது கைகளைக் கட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இது முன்கூட்டியே திட்டமிட்ட கொலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தீர்ப்பைக் கேட்டதும் லட்சமணாவின் மனைவி மற்றும் வழக்கறிஞரான அவரது மகள் ஆகியோர் கண்கலங்கினர். தனக்கு 70 வயதாகிறது என்றும், அதைக் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைக்குமாறு லட்சுமணா, நீதிபதியிடம் கோரினார். தன்னை திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரை திருவனந்தபுரம் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸôர் மேற்கொண்டனர்.

இந்தத் தீர்ப்பு தங்கள் குடும்பத்துக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக வர்கீஸின் சகோதரர் தாமஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மற்றொரு குற்றவாளியான விஜயனை நீதிமன்றம் விடுவித்தது வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். போலி என்கவுன்ட்டர் நடத்தும் காவல்துறையினருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும் என்று முன்னாள் நக்சல் தலைவர் கே. அஜிதா கூறினார். இருப்பினும் இப்போதும் ஜம்மு காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கத்தில் இதுபோன்ற போலி என்கவுன்ட்டர்கள் நடப்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்தத் தீர்ப்பை வர்கீஸின் நண்பர் குரோ வாசு வரவேற்றுள்ளார்.

போலீஸ்-பத்திரிகையாளர் மோதல்: நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே திரண்டிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் காரர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே சிறிது மோதல் ஏற்பட்டது. லட்சுமணாவை புகைப்படம் எடுப்பதற்கு போலீஸôர் தடுத்ததால் இந்தப் பிரச்னை ஏற்பட்டது.

நன்றி தினமணி 29.10.2010

Tuesday, October 26, 2010

உட்கார்ந்தால் எழுந்து நிற்கும் எழுச்சிநாயகன்...

ராஜீவ்காந்தி சிலை அவமதிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று சோனியாகாந்திக்கு தொல்.திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் கட்சி ஆகும்.

நாங்கள் மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறோம். அதன் அடிப்படையில் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் கட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். (நாங்க தி.மு.க. வுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம் என்று சொன்னது!)

2009ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். (தமிழினத்தை கொத்துக்கொத்தாக அழிந்ததற்காக நன்றிக்கடனா?)

உங்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நாங்களும் ஒரு உறுப்பினர்.

இந்த சமயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு எங்கள் கட்சிக்கும் அழைப்பு விடுத்ததற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். காஷ்மீருக்கு சென்ற அனைத்து கட்சிகள் குழுவில் என்னையும் ஒரு உறுப்பினராக நியமனம் செய்ததற்கும், சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து வரும் விரும்பத்தகாத சம்பவம் பற்றி உங்களுக்கு சில விளக்கங்கள் அளித்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். (இராஜபக்சேவை பார்க்க அனுப்பி வைத்ததற்கு நன்றி சொல்ல மறந்துட்டிங்களே!)

சென்னை அசோக்நகரில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலையை அவமானம் செய்த சம்பவத்தை கண்டித்து, அந்த மனித தன்மையற்ற நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று எங்கள் சார்பில் கேட்டிருக்கிறோம். (மனிதத்தன்மை என்றால் என்ன ஐயா?)
ஆனால், சில காங்கிரசார் அங்கு கூடிநின்று நடத்திய போராட்டத்தில் எங்கள் கட்சியினரையும் உள்நோக்கத்தோடு அதில் சம்பந்தப்படுத்தி பேசியதோடு என்னை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்த சம்பவத்தில் எங்களுக்கு துளியளவும் தொடர்பு இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

நீங்கள் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி செல்வதில் மட்டுமல்ல இந்த முழு இந்தியாவையும் வழிநடத்தி செல்லும் உங்களுக்கு எங்கள் முழு ஆதரவு எப்போதும் உண்டு. (ஸ்பெக்டரம்... கமன்வெல்த்... போன்ற பம்பர் சீட்டில் பரிசு விழுந்ததற்காகவும் வாழ்த்து சொல்லுங்கள்)

தேசத்தின் நலனுக்காக உங்களது குடும்பம் அளித்துள்ள பங்களிப்பை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். தமிழகத்தில் தலித் மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நல்லுறவு நீண்டகாலமாக இருந்து வருகிறது.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியால் தலித் மக்களின் நிலை பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் எல்.இளையபெருமாள் மற்றும் தமிழகத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கன் ஆகியோரை பெருமையுடனும், அன்புடனும் நினைவுகூறுகிறோம். (காங்கிரசும் காந்தியும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்தது என்ன? என்ற கேள்வியை இனி கேட்கமாட்டீங்களா?)

மீண்டும் ஒருமுறை உங்கள் குடும்பத்திற்கு, குறிப்பாக ராஜீவ்காந்திக்கு எனது மரியாதையையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். (நாங்களும் கும்புடுறோம் சாமி!)

ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு விவகாரத்தில் எங்களுக்கு சம்பந்தம் உண்டு என்று கூறப்படுவதை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. (நிச்சயமாக உங்களுக்கு சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை!)
“நான் பச்சை... மஞ்ச... சிவப்பு கலரு தமிழன்தான்!
உலகத்த இரட்சிக்க வந்த கடவுளும் நான்தான்!”

நன்றி நக்கீரன்.காம் (27.10.2010)