Monday, June 28, 2010

பழ. கருப்பையா மீது தாக்குதல்: கருணாநிதியின் சனநாயகம்

எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என எத்தனையோ சுதந்திரங்கள் இந்தநாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் இவை எதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடையாது என்பதே உண்மை. குறிப்பாக மானமுள்ளவர்களும், சுயசிந்தனையாளகளும் மக்களுக்காக சிந்திக்கவோ செயல்படவோ கூடாது என்பதை தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் நிறுபித்து வருகின்றனர்.

அடக்குமுறையின் செயல்வடிவம் தான் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் மாறுபடுகிறதே தவிர மற்றபடி யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல. அதிலும் குறிப்பாக செயலலிதாவும், கருணாநிதியும் தங்களுக்கென்று தனித்தனி “அடக்குமுறை கொள்கை”யை தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

செயலலிதா அவர்கள் சனநாயகம், கருத்துச் சுதந்திரம், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, ........ என எதைப்பற்றியும் கவலைப்படவும் மாட்டார். தனக்கு சரி என்று தோன்றியதையும், தன்னை எதிர்ப்பவர்களையும் எதைப்பற்றியும் கவலைப்பாடாமல் ஒடுக்குவார் அல்லது அழித்துவிடுவார்.

கருணாநிதி அவர்கள், கொள்கை, இலட்சியம், பகுத்தறிவு, அரசியல், சனநாயகம், கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்றவைகளைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார், மணிக்கணக்காக பேசுவார். ஆனால் தனக்கு எதிரான எதையுமே விட்டுவைக்கமாட்டார். குறிப்பாக கருணாநிதிக்கு எதிரானவர்கள் தமிழர்களாக இருந்துவிட்டால் காத்திருந்து கருவருத்துவிடுவார். இதற்கு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை. கருணாநிதியின் வாழ்க்கையே தமிழினத்திற்கு எதிரானதுதான்.

அதன் தொடர்ச்சியான ஒரு நிகழ்வே தற்போது பழ.கருப்பையா அவர்கள் தாக்கப்பட்டது...

சென்னை இராயப்பேட்டையில் பழ. கருப்பையாவின் அவர்களின் வீடு உள்ளது. இங்கு மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளோடு அவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்கியவர்கள் பழ.கருப்பையாவை பார்த்து “நீ என்ன பெரிய எழுத்தாளனா, இந்த வாய் தானே கலைஞருக்கு எதிராக பேசுகிறது” என்று சொல்லி வாயில் குத்தியுள்ளனர். “இந்த கைதானே எழுதியது” என்று அவருடைய கையில் குத்தியுள்ளனர். “இது ஆரம்பம்தான்” என்று கூறிக்கொண்டே வீட்டில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கியுனர்.

கருணாநிதியின் அரசியல் நிலைப்பாடுகள், தமிழினத் தூரோகச் செயல்கள், தமிழின துரோகத்தை மறைக்க நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு என அவரையும் அவரது ஆட்சியையும் பற்றி பழ.கருப்பையா அவர்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். அதற்காகவே இந்த பரிசு கருணாநிதியால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல் ஊடகத்தை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் ஊடக வேசிகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் இதை ஒரு செய்தியாக மட்டுமே வெளியிடுவார்கள். ஒரு சில சூராதி சூரர்கள் வழக்கம் போல் இப்படி ஒரு நிகழ்வு நிகழந்ததாகவே தங்களுடைய ஊடகத்தில் காட்டிக்கொள்ளமாட்டார்கள்.

வாழ்க! சனநாயகம்...

1 comment:

manjoorraja said...

மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழகத்தின் சாப்க்கேடு.