Wednesday, June 30, 2010

வெங்காய மாநாடு!

“உலகத் தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம். இது எதற்கு? கும்பகோணம் மகாமகத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. காங்கிரசைவிட, இந்த மந்திரிசபை தேவலாம் என்கிறார்கள். இந்த நேரத்தில் ஏன் இந்த கூத்து? கனம் அண்ணாதுரை 1972 இல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடட்டும்? உலகத் தமிழ்மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன், சூத்திரனாகத் தானே இருக்கப் போகிறான்? இழிவு ஒழியப் போகிறதா? கண்ணகி சிலையும் கம்பன் சிலையும் எதற்கு? இவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்கள் அல்லவா? - பெரியார் ‘விடுதலை’ 15.12.1967

1968-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டு குறித்து தந்தைபெரியார் கூறிய கருத்து. அன்று அவர் கூறியது போலவே உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தனது சுயநலத்திற்காக மகாமக திருவிழாபோல் கூடிக்களையும் மாநாடாக மாற்றிய பெருமை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் மு.கருணாநிதியையே சேரும்.
தான்செய்த தமிழினத் துரோகங்களை மூடிமறைக்க கருணாநிதியால் தற்போது நடத்தப்பட்ட கோவை செம்மொழி மாநாட்டை தந்தைப்பெரியார் பார்த்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்?

No comments: