Monday, September 20, 2010

பத்து ரூபாய்க்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து!

இந்த நாட்டில் புதியதாக ஒரு நோய் வருவதற்கு முன்பே அந்த நோய்க்கான மருந்து முதலில் வந்துவிடுவதும்...

நோய் வரும்போதே அதனோடு மருந்தும் சேர்ந்து வருவதும்...

வந்த மருந்துகள் அனைத்தும் ஒருமாதத்தில் தீபாவளிக்கு பட்டாசு விற்பதுபோல் விற்றுத் தீர்ந்து விடுவதும்...

பண்டிகைக் காலங்களில் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்குவதுபோல் அரசாங்கம் மருந்து நிறுவனங்களில் கொள்முதல் செய்து ஏழைகளுக்கு சலுகை விலையில் வழங்குவதும்... பரம ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதும்...

இந்தியப் பேரரசசும்! தமிழக சிற்றரசும் வல்லரசாகிவிட்டதையே கட்டுகிறது!

வாழ்க! அலோபதி மருந்து நிறுவனங்கள்!

....

பன்றிக்காய்ச்சல் வரமால் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியபேரரசின் நலவாழ்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் “மாற்று மருத்துவம்” தொடர்பான பிரிவு பன்றிக்காய்ச்சலை தடுப்பதற்காகன ஓமியோபதி மருந்தின் பெயரை அறிவித்துள்ளது. இந்த மருந்தின் விலையும் மிகக்குறைவு. (விலை குறைந்தது ரூ.10 முதல் ரூ. 30 வரை மட்டுமே.) மிகக்குறைந்த விலையில் வாங்கி ஒரு குடும்பமே பன்றிக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.... (ஒரு நாளைக்கு இரண்டு வேலையென மூன்று நாட்கள் சாப்பிட்டால் போதும்)

அந்த மருந்தின் பெயர் “ஆர்சனிக்கம் அல்பம்-30” (Arsenicum album-30) அனைத்து ஓமியோபதி மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. அருகில் உள்ள ஓமியோபதி மருத்துவரிடம் ஆலோசித்து உறுதிசெய்துகொண்டு பயன்படுத்துங்கள். (ஓமியோபதி மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பத்து ரூபாய்க்கு மருந்து வாங்கி எங்கள் குடும்பத்தில் பயன்படுத்துகிறோம்.)
...

No comments: