“இந்தியாவில் காங்கிரஸ் கட்சி அழிந்தால்தான் இந்த நாடு உருப்படும்” என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நாடு விடுதலை அடைந்தபோதே காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட்டிருக்க வேண்டும். நேருவின் சுயநலத்தால் அது நடைபெறாமல் போனது. தற்போது அந்த கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றதாம்! சோனியாகாந்தி நான்காவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துவிட்டாராம்! ஊடகங்கள் கொண்டாடுகிறது...
தற்போது உள்ள காங்கிரஸ் கட்சியின் உண்மையான பெயர் என்னவென்று தெரியவில்லை. (யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்) சோனியாகாந்தி தலைமையிலான அரசியல் கட்சியின் பெயரில் “காங்கிரஸ்” என்றும் நேரு குடும்பத்தின் பெயருக்குப்பின்னால் “கேண்டி” என்ற பெயர் திரித்து “காந்தி” என்று ஒட்டிக்கொண்டு இருப்பதாலேயே அந்த கட்சி நாட்டுக்கு விடுதலை வாங்கித்தந்த கட்சி என மீண்டும் மீண்டும் பரப்புரை செய்யப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்தின் சொத்தாக மாற்றப்பட்டதன் மூலம் இந்த நாடும் நேரு குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது. இந்தியாவில் நடைபெறும் ஆட்சி “மக்களாட்சியின் பெயரில் நடைபெறும் மன்னராட்சி” என்றால் அது மிகையில்லை. மன்னாராட்சி காலத்தில்கூட மன்னனின் நேரடி வாரிசுக்கே பட்டம் சூட்டிக்கொள்ளும் உரிமை இருந்ததாக சொல்லப்படுகிறது. இன்றைய வல்லரசு இந்தியாவில் மன்னனிடமோ மன்னனின் வாரிசுகளிடமோ வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு வழியில் முந்திவிரித்து பிள்ளை பெற்றுக்கொண்டால் போதும் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்ற நிலை உள்ளது... இந்த நாட்டின் குடிமக்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் இதற்காக வெட்கப்படப்போவதில்லை...
நேரு குடும்பத்தின் குடும்ப அட்டவனை இணையதளத்தில் கிடைத்தது அதையும் கொஞ்சம் பாருங்கள்...
