Saturday, March 20, 2010

“பிளஸ்” அல்லது “ஓசி டிக்கெட்”

பேருந்தில் பயனம் செய்தால் பேருந்தின் நடத்துனர் பயனிகளிடம் கட்டணம் வசூலிப்பார். பயனிகளும் இறங்கவேண்டிய ஊரைச்சொல்லி கட்டணத்தை கொடுப்பார்கள். இந்த நடைமுறை அனைத்து பேருந்துகளிலும் உண்டு.

ஒருசிலரிடம் நடத்துனர் கட்டணம் கேட்கும் போது அந்த நபர் “பிளஸ்” என்பார். நடத்துனர் அந்த நபரிடம் விசாரித்துவிட்டு அடுத்த பயனியை கவனிப்பார். அப்படி “பிளஸ்” என்று சொல்பவர்கள் பெரும்பாலும் காவல்துறையினராகவோ அல்லது வேறொரு பேருந்தின் ஊழியராகவோ இருப்பார். இது அவர்களின் பணிநிமித்தம் தொடர்பான புரிந்துணர்வின் அடிப்படையில் நிகழ்வது. அதில் தவறேதும் இல்லை.

ஆனால், மேற்குறிப்பிட்டவர்கள் அல்லாத ஒருசிலர் மிரட்டல் தோரணையில் அல்லது மிடுக்குடன் “பிளஸ்” என்பார். அந்த நபர்கள் பெரும்பாலும் பேருந்து பயனிக்கும் தடத்தில் உள்ள இளைஞர்களாகவோ, ரௌடிகளாகவோ அல்லது ஏதாவது ஒரு அரசியல் இயக்கத்தை சார்ந்தவர்களாகவோ இருக்கிறார்கள். சில நேரங்களில் அந்த நபர்களிடம் நடத்துனர் பனிவுடன் நடந்துகொள்கிறார்.

இதனால் இலாபம் அடைபவர்கள் இதற்காக வெட்கப்படுவதில்லை. ..

நட்டமடைபவர்கள் இதை சகித்துக்கொள்வது ஏனென்றுதான் புரியவில்லை...

No comments: