Sunday, April 10, 2011

நாங்க உங்களுக்கு இலவசமாக குழந்தை மட்டும்தான் பெத்துத்தரல-நடுவண் அமைச்சரின் திமிர்ப்பேச்சு

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் “தேர்தல் அறிக்கை” என்று ஒன்றை வெளியிட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் விழாக்கால இலவசங்கள் வழங்குவதுபோல் தேர்தல் திருவிழாக்கால இலவசங்கள் பல இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஊடகங்களும் அந்த அறிக்கைகளில் உள்ள ஒருசில உருப்படியான கொள்கை முடிவுகளைப்பற்றி செய்தியே வெளியிடுவதில்லை. மாறாக டி.வி.இலவசம்.. பிரிட்ஜ் இலவசம்... வாஷிங் மெஷின் இலவசம்... என்றே ஊடகங்கள் செய்திகளை வெளியிடகின்றன.

மக்களும், அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுத்து நம் கண்ணை மறைத்து அடிமடியில் கையை வைக்கப்போகிறார்கள் என்பதை உணராமல் அந்த இலவசங்களுக்காகவே ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இலவசங்களுக்காக ஏங்கும் மக்களின் எண்ணம் அரசியல் வியாதிகளை இன்று வரம்புமீறி பேசவைத்திருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்த்த நடுவண் அமைச்சர் நாராயணசாமி தேர்தல் பரப்புரையின் மக்களிடம் பேசும்போது... எங்களுக்கு நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு... இலவசமாக டி.வி. தருவோம்.. மிக்சி தருவோம்... பிரிஜ் தருவோம்... செல்போன் தருவோம்... புடவை தருவோம்... உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இலவசமாகத் தருவோம்... “நாங்க உங்களுக்கு இலவசமாக குழந்தை மட்டும்தான் பெத்துத்தரல...” என்று வரம்பு மீறி பேசியுள்ளார்.

நாராயணசாமியின் இந்தத் திமிர்ப்பேச்சுக்கு பல்வேறு கண்டனங்கள் பரவலாக எழுந்துள்ளன. வழக்கம்போல் உள்ளூர் ஊடங்கள் இந்த நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன.

மக்களே சிந்திப்பீர்!
இந்தத் திமிர்ப்பேச்சு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?

நாராயணசாமியின் வரம்புமீறிய பேச்சின் காட்சி:
http://www.youtube.com/watch?v=SzDJuQ2zqoU
http://www.youtube.com/watch?v=2i0LsAiRftk
http://www.youtube.com/watch?v=Teq0ZptFQPU
http://www.youtube.com/watch?v=kF_3qKybDj0

No comments: