Thursday, December 2, 2010

புதுச்சேரி அரசை கண்டித்து அரியாங்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!



அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தோடு பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன், வீராம்பட்டினம் தி.மு.க. கவுன்சிலர் பா.சக்திவேல், பாட்டாளி மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் க.தேவமணி ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசு கைது செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் அரியாங்குப்பத்தில் நடைபெற்றது.






பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் இரா.வீராசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பாளர் தந்தைப்பிரியன் துவக்கவுரை நிகழ்த்தினார். பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.அனந்தராமன் கண்டனவுரை ஆற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பொறுப்பாளர்களும் தமிழின உணர்வாளர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

No comments: