Monday, May 23, 2011

சமச்சீர் கல்வியை நிறுத்தக் கூடாது: அரசுக்கு அமைப்புகள் கோரிக்கை

சமச்சீர் கல்வியை அமல்படுத்திக்கொண்டே, அதிலுள்ள குறைகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்திய மாணவர் சங்கம்: பொதுப்பாடத்திட்டத்தை இந்த கல்வியாண்டில் நிறுத்திவைக்கும் புதிய அரசின் அமைச்சரவை முடிவு சரியானதல்ல. எனவே, அதை அமல்படுத்திக்கொண்டே அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

பொதுப்பாடத்திட்டத்தில் சில குறைகள் உள்ளதையும், அதில் பல மாற்றங்கள் செய்து செழுமைப்படுத்த வேண்டும் என்பதையும் ஏற்கிறோம்.

ஆனால், அதை இந்தப் பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்திக் கொண்டேதான் குறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும்.

கடந்த தி.மு.க. அரசு முழுமையான சமச்சீர் கல்வியைத் தராமல், பொதுப்பாடத்திட்டத்தை மட்டுமே ஏற்படுத்தியது. பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பான முழுமையான சமச்சீர் கல்வியை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு:இப்போது அமலில் உள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைகள் இருந்தால் நீக்க நவடிக்கை எடுக்கலாம். ஆனால், திட்டத்தையே நிறுத்துவது பொருத்தமானதாக இல்லை.

பழைய பாடத்திட்டத்தின் புதிதாக புத்தகங்களை அச்சிடுவதற்கு மூன்று மாதங்களாகும். அதுவரை பாடப்புத்தகங்கள் இல்லாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமப்படுவார்கள். தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை மாற்றி சமச்சீர் கல்விமுறையை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்:சமச்சீர் கல்வித் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைந்து அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் பாடத்திட்டங்களை தயாரிக்க வேண்டும். தமிழ்நாட்டின் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களும் தரமான கல்வியை இலவசமாகப் பெறத்தக்க வகையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

நன்றி: தினமணி 24.05.2011

Thursday, May 19, 2011

ஜெயலலிதாவின் நியாயமற்ற கோபம்!

புதுவை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி தனித்தே ஆட்சி என்று அறிவித்திருப்பதன் மூலம் அதிமுகவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறிய ரங்கசாமி, தேர்தலுக்குப் பிறகு அதே துரோகத்தை அதிமுகவுக்கு இழைத்திருக்கிறார்.

நடந்து முடிந்த புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அதிமுகவுடன் இணைந்து ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. தேர்தல் சமயத்தில், தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்த நான், புதுச்சேரிக்கு சென்று என். ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு அளிக்குமாறு புதுச்சேரி வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொண்டேன்.

இது மட்டுமல்லாமல், தேர்தலுக்கு முன்பு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்தும், கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை மனதில் வைத்தும் தான் புதுச்சேரி மக்கள் அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர். அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.

கழகக் கூட்டணி வெற்றி பெற்றதும், புதுச்சேரி யூனியன் பிரதேச வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் என்.ஆர். ரங்கசாமி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் நான் தெரிவித்திருந்தேன். ஆனால், ரங்கசாமி அவர்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவிக்கக்கூட மனமில்லை. நன்றி மறந்து நாணயமற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார் ரங்கசாமி. எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை என்ற வள்ளுவரின் வாய்மொழியை இந்தத் தருணத்தில் நான் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதிமுக ஆதரவுடனும், செல்வாக்குடனும் வெற்றி பெற்றுவிட்டு ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரச் செல்லும் போது ஒரு வார்த்தை கூட எனக்குத் தெரிவிக்காமல், கழக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினரின் ஆதரவுடன் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருப்பது கூட்டணி தர்மத்திற்கு விரோதமான செயல் ஆகும். நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி. முதுகில் குத்துவதில் எல்லோரையும் மிஞ்சிவிட்டார் ரங்கசாமி. கூட்டணிக் கட்சியுடனேயே நாணயமற்ற முறையில் நடந்து கொண்டுள்ள ரங்கசாமி மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்? புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் ஏமாற்று நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்

ஜெயலலிதா கோபப்படுவதில் எந்தவித நியாயமும் இல்லை என்பதும் புதுச்சேரி மாநிலத்தில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு என்ன என்பதும் புதுச்சேரி மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் வேறு வழியின்றி அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சியைப் பார்த்து தமிழக மக்கள் வாக்களிக்க வில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் புதுச்சேரி மக்கள் ரங்கசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் வாக்களித்தனர்.

புதுச்சேரி அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் ரங்கசாமியின் படத்தைப்போட்டு..

“ரங்கசாமி முதலமைச்சராக எனக்கு வாக்களியுங்கள்”...

“நான் தேர்தலில் நிற்கவில்லை ரங்கசாமிதாம்மா என்ன நிக்க வச்சாரு.. ”

“நான் அ.தி.மு.க. வேட்பாளரா வரவில்லை ரங்கசாமியின் வேட்பாளராகத்தான் உங்களிடம் வந்துள்ளேன்”...

அதனால எனக்கு இரட்டை இலையில ஓட்டு போடுங்க...”


என்று கூறித்தான் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் மக்களிடம் வாக்கு கேட்டனர். அதனாலேயே அவர்களும் வெற்றி பெற்றனர்.

புதுச்சேரியில் ரங்கசாமியை தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து போட்டியிட்டிருந்தாலோ, அல்லது அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டிருந்தாலோ அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் டெப்பாசிட் தொகையை இழந்திருப்பார்கள். இந்த உண்மை தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்... இந்த உண்மை ஜெயலலிதாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

Friday, April 22, 2011

ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: ஜெயலலிதா

ஐ.நா. மன்றத்தால் போர்க் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத்தான் அண்மையில் 4 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால் இலங்கை அதிகாரிகளின் சித்ரவதையால் சிதைந்து அழுகிய நிலையில் கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி. இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இதுபோன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும் நிலையில், இலங்கைத் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

வருத்தம் தெரிவிக்கவில்லை:

இலங்கை அரசின் கொடுஞ் செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல் இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தி போர்க் குற்றத்துக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்திய அரசோ, தமிழக அரசோ இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோ கூட தெரிவிக்கவில்லை.

மாறாக 2009 அக்டோபரில் தன்னுடைய மகள் கனிமொழி உள்பட திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி. இலங்கையிலிருந்து திரும்பிய நாடாளுமன்றக் குழுவினர் அங்கு எல்லாமே நன்றாக இருக்கிறது என்றும் அங்குள்ள தமிழர்கள் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு புகார் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தனர்.

என்னதான் கருணாநிதி நற்சான்றிதழ் கொடுத்தாலும் அங்குள்ள தமிழர்களின் நெஞ்சை உருக்கும் நிலையைக் கண்டு மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பொங்கி எழுந்தன. இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அனுப்பிய குழுவின் அறிக்கை மூலம் இலங்கை அரசின் கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அந்த அறிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "ஐ.நா. குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படின் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான ஆபத்து விளைவிக்கக் கூடிய அத்துமீறல்களை இலங்கை அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் சில குற்றங்கள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகும்.

2009-ம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை மனித வர்க்கத்தின் படுகொலை நடந்த இறுதி நாள்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அனாமதேயமாக செத்து மடிந்தனர். இது ஐக்கிய நாடுகள் சபை குழுவின் அறிக்கையில் மிகத் தெளிவாக உள்ளது.

தமிழினப் பாதுகாவலர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதியின் வேஷம் ஐ.நா. அறிக்கையின் மூலம் கலைக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இனப் படுகொலையை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த கருணாநிதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ராஜபட்ச, அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்குக்கு இந்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையெனில் அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு, இலங்கை குறித்து சோனியா காந்தி தெரிவித்த கருத்துகள் வாய்மையற்றவை என்றாகிவிடும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை நடத்தியது இந்திய அரசுதான் என்று கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டும் உண்மை என்று நம்புவதற்கு வழி வகுக்கும்.
நன்றி: தினமணி 23.04.2011

Sunday, April 10, 2011

நாங்க உங்களுக்கு இலவசமாக குழந்தை மட்டும்தான் பெத்துத்தரல-நடுவண் அமைச்சரின் திமிர்ப்பேச்சு

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் “தேர்தல் அறிக்கை” என்று ஒன்றை வெளியிட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் விழாக்கால இலவசங்கள் வழங்குவதுபோல் தேர்தல் திருவிழாக்கால இலவசங்கள் பல இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஊடகங்களும் அந்த அறிக்கைகளில் உள்ள ஒருசில உருப்படியான கொள்கை முடிவுகளைப்பற்றி செய்தியே வெளியிடுவதில்லை. மாறாக டி.வி.இலவசம்.. பிரிட்ஜ் இலவசம்... வாஷிங் மெஷின் இலவசம்... என்றே ஊடகங்கள் செய்திகளை வெளியிடகின்றன.

மக்களும், அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுத்து நம் கண்ணை மறைத்து அடிமடியில் கையை வைக்கப்போகிறார்கள் என்பதை உணராமல் அந்த இலவசங்களுக்காகவே ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இலவசங்களுக்காக ஏங்கும் மக்களின் எண்ணம் அரசியல் வியாதிகளை இன்று வரம்புமீறி பேசவைத்திருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்த்த நடுவண் அமைச்சர் நாராயணசாமி தேர்தல் பரப்புரையின் மக்களிடம் பேசும்போது... எங்களுக்கு நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு... இலவசமாக டி.வி. தருவோம்.. மிக்சி தருவோம்... பிரிஜ் தருவோம்... செல்போன் தருவோம்... புடவை தருவோம்... உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இலவசமாகத் தருவோம்... “நாங்க உங்களுக்கு இலவசமாக குழந்தை மட்டும்தான் பெத்துத்தரல...” என்று வரம்பு மீறி பேசியுள்ளார்.

நாராயணசாமியின் இந்தத் திமிர்ப்பேச்சுக்கு பல்வேறு கண்டனங்கள் பரவலாக எழுந்துள்ளன. வழக்கம்போல் உள்ளூர் ஊடங்கள் இந்த நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன.

மக்களே சிந்திப்பீர்!
இந்தத் திமிர்ப்பேச்சு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?

நாராயணசாமியின் வரம்புமீறிய பேச்சின் காட்சி:
http://www.youtube.com/watch?v=SzDJuQ2zqoU
http://www.youtube.com/watch?v=2i0LsAiRftk
http://www.youtube.com/watch?v=Teq0ZptFQPU
http://www.youtube.com/watch?v=kF_3qKybDj0

Friday, April 1, 2011

வைகோ அவர்களே! கற்பழிக்க வந்தவனிடம் கண்ணியமாக நடக்க வேண்டுமா?

தமிழன் காசில் தமிழினத்திற்கு துரோகமிழைப்தையே தொழிலாகக் கொண்டுள்ள “தினமலர்” நாளேடு முட்டள்தினத்தை கொண்டாடுவதற்காக வைகோ தொடர்பாக ஒரு செய்தியை நேற்று வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியை படித்த மானமுள்ளத் தமிழர்கள் அனைவரும் தினமலருக்கு எதிராக கோபமுற்றனர்.

ஆனால், வழக்கம்போல் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு....


”...எத்தகைய விமர்சனங்களை எவர் நம்மீது கூறினாலும், சேற்றை வாரி இறைத்தாலும், அண்ணாவின் மணிவாசகத்தை கருதி, எதையும் தாங்கும் இதயத்தோடு பொறுத்துக் கொள்வோம்....

...கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு இலக்கணமாக இயங்குவோம்! எனவே தோழர்கள் இதுகாறும் கடைப்பிடித்து வந்த கண்ணியமான அணுகுமுறைக்கு சிறிய சேதமும் ஏற்படாவாறு ஆத்திரத்தை வெளிக்காட்டும் எவ்வித செயலிலும் ஈடுபடக் கூடாது என வேண்டுகிறேன்... என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மரியாதைக்குரிய வைகோ அவர்களிடம் கேட்பது இதுதான்...

“கொலைவெறியோடு நம்மை குத்தவரும் எதிரியிடமும்...
காமவெறியோடு ஒரு பெண்ணின் கற்பை சூறையாடவரும் காமக்கொடூரனிடமும்...
தமிழர்கள் கண்ணியத்தோடுதான் நடந்துகொள்ள வேண்டுமா?

சாதரண கொசு, மூட்டைப்பூச்சி, எறும்பு போன்றவைகளிடமிருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை நாம் மேற்கொள்கிறோம். தமிழினத்தை கருவறுக்க வந்த தினமலருக்கு எதிராக சிறு துரும்பையாவது எடுத்துவீச வேண்டாமா?...

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களே தற்போது தமிழனை வெறுப்பேற்றிக்கொண்டிறுக்கிறது.

தினமலரின் வேசித்தனம்

தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் சீரழிப்பதற்காகவே “தினமலர்” (எ) “தினமலம்” என்ற நாளேடு தமிழ்நாட்டில் வெளிவருகிறது. இந்த கருமாதி பத்திரிக்கையில் இன்று (01.04.2011) “வைகோ செயலலிதாவை சந்தித்தார்” என்று கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டு “தேர்தல் களம் 2011” சிறப்பிதழில் அது தொடர்பாக விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது.

இச்செய்தியை உண்மையென நம்பி மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் இதைப் பற்றியே பேசிக்கொண்டனர். வைகோவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் பொதுமக்கள் மத்தியில் எழுந்தன. ம.தி.மு.க.-வினரும் நடுநிலையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், இதுதொடர்பாக வேறு எந்தவொரு நாளேட்டிலும் செய்தி வரவில்லை. கடைசியில் இன்று முட்டாள்தினமாம் அதற்காக மக்களை ஏமாற்றவே இப்படி ஒரு செய்தி வெளியிட்டார்களாம்.

மக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் நேரத்தில் இப்படி செய்தியை வெளியிட்ட தினமலரை சனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் கண்டிக்க வேண்டும்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசியலில் எமது இயக்கத்தை பற்றியும், என்னைப் பற்றியும் கடுமையான விமர்சனங்கள் ஏடுகளில், ஊடகங்களில் வந்தாலும் அவற்றை ஜனநாயக பண்போடு தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருக்கிறோம். எவ்வளவோ கடுமையாக நாம் காயப்படுத்தப்பட்ட நேரங்களிலும், ஆத்திரத்துக்கு கிஞ்சிற்றும் இடம் கொடுத்தது இல்லை. நாளிதழ் ஒன்றில் இன்றைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமையை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டு தேர்தல் களம் என்ற தலைப்பில் பிரதானமாக வெளியிடப்பட்ட செய்திக்கு உள்ளே ஏழாம் பக்கத்தில் உண்மை என்ன? என்று கூறி, நான்கு வரிகளில் இது ஏப்ரல் முதல்நாள் செய்தி என குறிப்பிட்டு உள்ளது.

வேடிக்கையாக பொய்களை சொல்லி, பிறரை முட்டாளாக்கும் வேலை ஏப்ரல் முதல்நாள் நடைபெறும் என்றும், மேற்கு நாடுகளில் பகுத்தறிவுக்கு பொருந்தாத ஒரு வழக்கம் இருக்கிறது. அனல்வீசும் தேர்தல் களத்தில் தமிழகம் இருக்கின்ற நிலையில், மறுமலர்ச்சி தி.மு.க.வை பற்றி, இப்படி ஒரு செய்தி வெளியிட்டது நியாயமான கோபத்தையும், வேதனையையும் தோழர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

எத்தகைய விமர்சனங்களை எவர் நம்மீது கூறினாலும், சேற்றை வாரி இறைத்தாலும், அண்ணாவின் மணிவாசகத்தை கருதி, எதையும் தாங்கும் இதயத்தோடு பொறுத்துக் கொள்வோம். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுத்தபின்னர் கழகம்தான் போட்டி இடவில்லையே, நாம் சுயேச்சையாக போட்டியிட்டால் என்ன என்று எண்ணி, ஒரு தொகுதியில் கூட கழகத் தோழர்கள் சுயேச்சையாக கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது, வேறு பல கட்சிகளின் போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கும் சூழலில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் கட்டுப்பாடு இமயம் நிகர்த்தது என்று நாட்டு மக்களை சிந்திக்க வைத்து இருக்கிறது.

கழகத்துக்கு பெருமை தேடித்தந்த தோழர்களுக்கு, இயக்கம் காலமெல்லாம் கடமைப்பட்டு இருக்கின்றது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு இலக்கணமாக இயங்குவோம்! எனவே தோழர்கள் இதுகாறும் கடைப்பிடித்து வந்த கண்ணியமான அணுகுமுறைக்கு சிறிய சேதமும் ஏற்படாவாறு ஆத்திரத்தை வெளிக்காட்டும் எவ்வித செயலிலும் ஈடுபடக் கூடாது என வேண்டுகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலருக்கு ஒரு ஆலோசனை: நீங்கள் பரபரப்பாக செய்தி வெளியிடவேண்டும் என்று நினைத்தால்...

“தினமலர் அலுவலகத்தில் இடி விழுந்தது!

தினமலர் அலுவலகங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது!

தினமலர் குடும்பத்துப் பெண்கள் அனைவரும் ஒரே நாளில் டிரைவரோடும், வாட்ச்மேனோடும் ஓடிவிட்டனர்!

தினமலர் அலுவலகம் இன்று ஒருநாள் மட்டும் விபச்சாரத்திற்கு இலவசம்!”

என செய்திகளை வெளியிட்டால் தமிழ்நாடே பரபரப்படையும், இந்நிகழ்வுகள் அனைத்தும் உண்மையாவே இருந்துவிட்டால் தமிழர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைவார்கள்!..

Thursday, February 17, 2011

புதுக்கோட்டை சு.முத்துக்குமாரை வணங்குகிறோம்...


தமிழினப் பகைவர்களால் மாண்ட
தமிழ் தேசிய சிந்தனையாளரும் தமிழீழ ஆதரவாளருமான
புதுக்கோட்டை சு.முத்துக்குமாரை
வணங்குகிறோம்...