Thursday, May 26, 2011

சமச்சீர் கல்வி‌க்கு மூடு‌விழா ‌நியா‌ய‌ம்தானா?

''தற்போது நடைமுறைப்படுத்த உள்ள சமச்சீர் கல்வி, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் அமையவில்லை. தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வி தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது. எனவே, சமச்சீர் கல்வி முறை அமல்படுத்த வேண்டும் என்றும், ஆனால் அதே நேரத்தில் எவ்வாறு கல்வி தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. ஆகவே, இந்த கல்வி ஆண்டில் பழைய பாடப் புத்தகங்களையே பின்பற்றலாம்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா தலைமை‌யி‌ல் நடைபெ‌ற்ற முத‌ல் அமை‌ச்சரவை கூ‌ட்ட‌த்த‌ி‌ல் முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழக‌த்‌தி‌ல் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்தது.

இத‌ற்கு தனியார் பள்ளிகளில் குறிப்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சமச்சீர் கல்வி திட்டத்தால் மெட்ரிக் பள்ளி மாணவர்களின் கல்வி தரம் குறையும் என்று அவர்கள் தெரிவித்தனர். மற்றொரு பிரிவினர் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான, தரமான கல்வி கிடைக்கும் என்பதால் சமச்சீர் கல்வியை ஆதரித்தார்கள்.

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை எ‌தி‌‌‌ர்‌த்த ‌சில மெ‌ட்‌ரி‌க் ப‌ள்‌ளிக‌ள‌், த‌ங்க‌ள் ப‌ள்‌ளி‌யி‌ல் படி‌க்கு‌ம் மாணவ‌ர்களை ‌சி‌.பி.எ‌‌ஸ்.இ-‌க்கு மாற பெ‌ற்றோ‌ர்களை வ‌‌ற்புறு‌த்‌தி வ‌ந்தது. அ‌ப்படி ‌சி.‌பி.எ‌ஸ்.இ பாட‌த்‌‌தி‌ட்ட‌த்த‌ி‌ற்கு மாறு‌பவ‌ர்களு‌க்கு க‌ல்‌வி‌க் க‌ட்டண‌ம் இருமட‌ங்காகு‌ம். இதனா‌ல் த‌ங்க‌ள் ‌பி‌ள்ளைகளை ‌சி‌.பி.எ‌ஸ்.இ பாட‌த்‌‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு மா‌ற்ற பெ‌ற்றோ‌ர்க‌ள் த‌யங்‌‌கின‌ர். ‌சில மெ‌ட்‌ரி‌க் ப‌ள்‌‌ளிக‌ள் வலு‌க்க‌ட்டாயமாக மாணவ‌ர்களை ‌சி.‌பி.எ‌ஸ்.இ. பாட‌த்‌தி‌‌ட்ட‌த்‌தி‌ற்கு மா‌ற்‌றின‌ர்.

முதல் கட்டமாக கடந்த 2010-11 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பிற்கும், 6ஆம் வகுப்பிற்கும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. இந்த கல்வியாண்டில் இருந்து 10ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த கட‌‌ந்த அரசு திட்டமிட்டு அதற்காக 200 கோடி ரூபா‌யி‌ல் ஏழரை கோடி பாட புத்தகங்கள் அச்சி‌ட்டது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.இ.அ.தி.மு.க. அரசு, இந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படமாட்டாது என்று அறிவித்துள்ளது.

அ.இ.அ‌.தி.மு.க அர‌சி‌ன் இ‌ந்த ‌அ‌றி‌வி‌ப்பு பெ‌ற்றோ‌ர்க‌ளு‌க்கு‌ம், இ‌ந்த க‌ல்‌வி‌த் ‌தி‌ட்ட‌த்தை ஆத‌ரி‌த்த அனை‌த்து தலைவ‌‌ர்களு‌‌க்கு‌ம் அ‌தி‌ர்‌‌ச்‌சி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ஏழைக‌ள் மு‌த‌ல் பண‌க்கார குழ‌ந்தைக‌ள் வரை ஒரே மா‌தி‌ரியான க‌ல்‌வி ‌கிடை‌க்க ஏ‌ற்பாடு செ‌ய்ததது கட‌ந்த ஆ‌ட்‌சி, த‌ற்போது பு‌திதாக வ‌ந்து‌ள்ள அ.இ.அ.‌தி.மு.க அரசு மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் சம‌ச்‌‌‌சீ‌ர் க‌ல்‌வி அமையவில்லை எ‌ன்று கூ‌றி இத‌ற்கு மூடு‌விழா நடத்துகிறது.

ச‌ம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌‌யி‌ன் தர‌த்தை உ‌ய‌ர்‌த்துவது கு‌றி‌த்து ஆராய வ‌ல்லுந‌ர் குழு ஒ‌ன்றையு‌ம் அமை‌க்க‌ப் போ‌கிறதா‌ம் அ.இ.அ‌.‌தி.மு.க. அரசு. அ‌ந்த குழுவு‌க்கு ஆரா‌ய்‌ந்து முடி‌க்க ஒரு கால‌க்கெடு ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்பட‌வி‌ல்லை. அ‌ப்படியெ‌ன்றா‌ல் இ‌ந்த வ‌ல்லுந‌ர் எ‌ப்போது க‌ல்‌வி‌த் தர‌த்தை ஆரா‌ய எ‌த்தனை ஆ‌ண்டுக‌ள் தேவை‌ப்படுமோ எ‌ன்று தெ‌ரிய‌வி‌ல்லை.

‌அ.இ.அ‌.தி.மு.க அரசு இ‌ப்படி இரு‌க்கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் சில ம‌ெ‌ட்‌ரி‌க்‌ ப‌ள்‌‌ளிக‌ள் ஏழை குழ‌ந்தைகளை த‌ங்க‌ள் ப‌ள்‌ளி‌யி‌ல் சே‌ர்‌ப்ப‌தி‌‌ல்லை. காரண‌ம் எ‌ன்ன எ‌ன்றா‌ல் இ‌ந்த குழ‌ந்தைகளா‌ல் த‌ங்க‌ள் ப‌ள்‌ளி‌யி‌ன் தர‌ம் குறைவதோடு, ஒழு‌க்க‌க்கேடு‌ம் ஏ‌ற்படு‌ம் எ‌ன்‌கிறது. இ‌ப்படி‌ப்ப‌ட்ட மெ‌‌ட்‌ரி‌க் ப‌ள்‌ளிக‌ள் பண‌ம் ஒ‌ன்றே எ‌ன்ற கு‌றி‌க்கோளுட‌ன் செய‌ல்படு‌கிறது. இ‌ப்படி‌ப்ப‌ட்ட ப‌ள்‌ளிகளை க‌ண்ட‌றி‌ந்து அரசு நடவடி‌க்கை எடு‌க்குமா எ‌ன்பது கே‌ள்‌வி‌க்கு‌றி‌‌தா‌ன்.

தெ‌ரி‌ந்தோ தெ‌ரியாமலோ கட‌ந்த ‌தி.மு.க. அரசு கொ‌ண்டு வ‌ந்த ‌சில ந‌ல்ல‌த் ‌தி‌ட்ட‌ங்களை அ.இ.அ.‌தி.மு.க அரசு ‌நிறைவ‌ே‌ற்று‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் அ‌ந்த ‌‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ம் ஜெயல‌லிதா த‌ற்போது மூடு‌விழா நட‌த்‌தி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்.

இது ஒருப‌க்க‌ம் இரு‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல் த‌னியா‌ர் ப‌ள்‌‌ளிக‌ள் க‌‌ல்‌வி‌‌க் க‌ட்டண‌த்தை த‌ங்க‌ள் இ‌ஷ்ட‌ம் போ‌ல் வசூ‌லி‌க்க‌த் தொட‌ங்‌கி‌வி‌ட்டன. சம‌ச்‌‌சீ‌ர் க‌ல்‌வி‌த்த‌ி‌ட்ட‌ம் வர‌ப்போ‌கிறது எ‌ன்று கரு‌தி ‌சில மெ‌ட்‌ரி‌க் ப‌‌‌ள்‌‌ளிக‌ள் ‌ஒரா‌ண்டு‌க்கான க‌ல்‌வி‌‌க் க‌ட்ட‌ண‌த்தை ஒரே தவணை‌யி‌ல் செலு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் பெ‌ற்றோ‌ர்களை வ‌‌‌‌ற்புறு‌த்து‌கிறது. இதனை க‌ண்டி‌த்து ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் செ‌ய்த பெ‌ற்றோ‌ர்களு‌க்கு எ‌‌ந்த பயனும் இ‌ல்லை.

முத‌லி‌ல் த‌னியா‌ர் ப‌ள்‌ளிகளு‌க்கான க‌ல்‌வி‌க் க‌ட்டண‌த்தை த‌மிழக அரசு உடனடியாக ‌நி‌ர்ண‌யி‌க்க வ‌ே‌ண்டு‌ம். க‌ல்‌வி‌க் க‌ட்டண‌ம் தொட‌ர்பாக உய‌ர்‌நீ‌திம‌ன்ற ஓ‌ய்வு பெ‌ற்ற ‌நீ‌திப‌தி ர‌விராஜபா‌ண்டிய‌ன் தனது அ‌றி‌க்கையை ‌விரை‌வி‌ல் த‌மிழக அர‌சிட‌‌ம் தா‌க்க‌ல் ச‌ெ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்பதே பல கோடி பெ‌ற்றோ‌ர்க‌‌ளி‌ன் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பாக உ‌ள்ளது.

‌நீ‌திப‌தி ர‌விராஜபா‌ண்டிய‌ன் தா‌க்க‌ல் செ‌ய்யு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் அதனை த‌மிழக அரசு ஏ‌ற்று‌க் கொ‌ள்ளுமா? அ‌‌ல்லது ‌மீ‌ண்‌டு‌ம் வ‌ல்லுந‌ர் குழு ஒ‌ன்று ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு பு‌திய க‌ல்‌வி‌க் க‌ட்டண‌த்தை ‌நி‌ர்ண‌யி‌‌க்க‌ப்படு‌‌ம் எ‌ன்று த‌மிழக அரசு சொ‌ல்வ‌தி‌ல் எ‌ந்த ஆ‌ச்ச‌ரிய‌‌மு‌ம் இ‌ல்லை.

சம‌‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌ மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் அமையவில்லை. தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வி தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது எ‌ன்று கூறு‌ம் த‌மிழக அரசு, த‌ற்போது‌ள்ள சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி ‌பாட‌த்‌தி‌ட்ட‌‌‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌சில குறைகளை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு ஜெயல‌லிதா ‌நினை‌ப்பது போ‌ல் பாட‌த்‌தி‌ட்ட‌த்தை மா‌‌ற்‌றி‌க் கொ‌‌ள்ளலா‌ம்.

அதை ‌வி‌ட்டு‌‌வி‌ட்டு முந்தைய ‌தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டம் என்பதற்காக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்ப‌‌தி‌ல் இரு‌ந்து ஜெயல‌லிதா இ‌ன்னு‌ம் மாற‌வி‌ல்லை எ‌ன்றே தெ‌ரி‌கிறது.

மெ‌‌ட்‌ரி‌க் ப‌ள்‌ளி‌யி‌ல் படி‌த்த ஜெயல‌லிதா, அத‌ன் ‌விசுவாச‌த்தை கா‌ட்டுவத‌ற்காக மெ‌ட்‌ரி‌க் ப‌ள்‌ளிகளு‌க்கு ஜெயல‌லிதா உதவுவதாகவே தெ‌ரி‌கிறது. எது எ‌ப்படியோ இ‌னி சம‌‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி எ‌ன்பது எ‌ட்டா‌க்‌‌க‌னிதா‌ன்.

நன்றி தமிழ்.வெப்துனியா.காம்

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தலைவியால் இன்னும் என்னன்ன நடக்குமோ...

பொ.முருகன் said...

இதுக்குதானே,ஆசைப்பட்டீர்கள் தமிழகமக்களே,தீனிக்கு,தானி சால பெட்டரு என்பதை முதல் வாரத்திலேயே உணர்ந்திருப்பார்கள் ஓட்டுப்போட்டவர்கள்.